தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். 
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி சேலம் எஸ்பியாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், திருச்சி எஸ்பியாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்க பிரிவு எஸ்பியாகவும் மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இருந்த வருண்குமார் திருச்சி மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் சென்னை தியாகராயர் நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன் சேலம் எஸ்பியாகவும், அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும், சிவகங்கை மாவட்ட எஸ்பியாக அரவிந்த், மயிலாடுதுறை மாவட்ட எஸ்பீயாக மீனா நியமிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com