முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

சுனாமி 19-ம் ஆண்டு நினைவு நாள்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேளாங்கண்ணி  பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2023, 1:11 pm IST

சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேளாங்கண்ணி  பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Story image

சுனாமி எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்தது. 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் நாகை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

Story image

நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்த பொதுமக்கள் 6,065 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

Story image

இதேபோல் வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த 1000-க்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.

Story image

தொடர்ந்து ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி கடற்கரையிலிருந்து அமைதிப் பேரணியாக 3 கிமீ தூரம் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர்.

Story image

சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்து போனாலும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில்  வந்து வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபியில் கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலைகள், மலர் வலையம், அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.