சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சுனாமி எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்தது. 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் நாகை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்த பொதுமக்கள் 6,065 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதேபோல் வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த 1000-க்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.

தொடர்ந்து ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி கடற்கரையிலிருந்து அமைதிப் பேரணியாக 3 கிமீ தூரம் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர்.

இதையும் படிக்க: இளைஞர்கள், போதை பொருள்களைத் தவிர்க்க வேண்டும்: மோடி
சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்து போனாலும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில் வந்து வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபியில் கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலைகள், மலர் வலையம், அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்: பிரதமர் மோடி
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay

தமிழக மக்களின் நம்பிக்கையை விஜய் நிறைவேற்றுவார்: ராகுல் காந்தி

முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம்
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

