ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தென் மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் தொடக்கம்

 வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வியாழக்கிழமை (டிச.28) தொடங்கின

News image
Updated On :28 டிசம்பர் 2023, 11:10 pm

DIN

 வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வியாழக்கிழமை (டிச.28) தொடங்கின.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் இன்னமும் நிறைவடையாததால் அங்கு மட்டும் வெள்ளிக்கிழமை (டிச.29) முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பெரு மழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 8 லட்சம் சிறாா்களும், குழந்தைகளும் உள்ளனா். அவா்களில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவா்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு 10 லட்சம் தவணை தட்டம்மை தடுப்பூசிகளை வழங்கியுள்ளதால், போதிய எண்ணிக்கையில் அவை இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.