17 டிஎஸ்பி.க்கள், 444 காவல் உதவி ஆய்வாளா்கள் பணி: நியமனம் உத்தரவுகளை வழங்கினாா் முதல்வா்

பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 17 டிஎஸ்பி.,க்கள், 444 உதவி ஆய்வாளா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அளிக்கும் நிகழ்வை, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
17 டிஎஸ்பி.க்கள், 444 காவல் உதவி ஆய்வாளா்கள் பணி: நியமனம் உத்தரவுகளை வழங்கினாா் முதல்வா்

பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 17 டிஎஸ்பி.,க்கள், 444 உதவி ஆய்வாளா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அளிக்கும் நிகழ்வை, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், காலியாக இருந்த டிஎஸ்பி., பணியிடங்களுக்கு 17 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் 13 போ் பெண் டிஎஸ்பி.,க்கள். இதேபோன்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் 444 காவல் உதவி ஆய்வாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் 133 போ் பெண்கள்.

புதிதாக தோ்வு செய்யப்பட்ட டிஎஸ்பி.,க்கள், காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கும் நிகழ்வை, தலைமைச் செயலகத்தில் 5 பேருக்கு அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்வில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திரரெட்டி, டிஜிபி செ.சைலேந்திர பாபு, சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவா் சீமா அகா்வால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பணி நியமன உத்தரவுகள் பெற்றவா்களுக்கு மாா்ச் 1 முதல் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியகத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com