ஜம்மு-காஷ்மீரில் கல்வீச்சும், போராட்டங்களும் குறைந்துள்ளன என்றாலும், சிறுபான்மையினரைக் குறிவைப்பது இன்னும் மாறவில்லை என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகிறது.
முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒமர் அப்துல்லா பேசியதாவது:
"பிரிட்டிஷுக்கு எதிரான கருத்து வேறுபாடுகளால்தான் இந்தியா உருவானது. ஜனநாயகத்தின் சாரமே கருத்து வேறுபாடுதான். உலகிலேயே நாம்தான் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆனால், ஜனநாயகத்தின்படிதான் நாம் இயங்கிக்கொண்டிருக்கோமா?
காஷ்மீரில் கல்வீச்சும், போராட்டங்களும் குறைந்துள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், சிறுபான்மையினரைக் குறிவைப்பது இன்னும் மாறவில்லை.
இதையும் படிக்க | மதங்களைப் பற்றி பேசக்கூடிய தேர்தல் அல்ல இது: சச்சின் பைலட்
சட்டப்பிரிவு 370-ஐ பொறுத்தவரை காங்கிரஸுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. இதில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், காங்கிரஸை மட்டும் எதற்காக தனித்து குறிப்பிட வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நிற்கும் ஒரு அரசியல் கட்சியைக் காட்டுங்கள்?" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!
எல்ஐகே டிரைலர்!
திருமாவளவன் விலகல்! விசிகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


