தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் பெருகட்டும்: தருமபுரம் ஆதீனம்

தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் பெருகட்டும் என்று தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தா

News image

தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்

Updated On :14 ஜனவரி 2023, 9:38 am

DIN

தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் பெருகட்டும் என்று தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

போக்குதல் என்பது இந்திரனை குறிக்கும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது தீய எண்ணங்களை விலக்கி,  நல்ல எண்ணங்கள் பெருகட்டும் என்பதாகும்.

ஆனால் சிலர் வீட்டில் உள்ள பழைய பொருள்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். இது தவறானது. இதனால் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழலும் பாதிப்பு ஏற்படுகிறது. புகையில்லா போகியாகக் கொண்டாட வேண்டும்.

சூரியன் தான் விவசாயம் செழிக்க உதவி புரிகிறார். சூரியனிடமிருந்து வெளிச்சத்தை வாங்கி விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆதனால் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தைப்பொங்கல் திருநாளும் உழவுக்கு உதவி செய்து கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கலும் ஜீவ காருண்யமாக கொண்டாடி வருகிறோம்.

அதுபோல் பெரியோர்களின் துணையோடு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதற்காக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியோர்கள் மற்றும் உற்றார்களின் ஆசியுடன் வாழ்க்கை நடத்திட காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இவ்வாறாக தமிழர் திருநாள் 4 நாள்கள் கொண்டாடப்படுகிறது என தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.