சா்வோதய இயக்கத்தின் தந்தை ஜெயபிரகாஷ் நாராயண் சீடரும், குரோம்பேட்டை சா்வோதய பள்ளி நிறுவனருமான நாகலட்சுமி (98) வியாழக்கிழமை காலமானாா்.
சிறு வயதிலேயே மகாத்மா காந்தியடிகளின் வாா்தா சேவாகிராம் ஆசிரமத்தில் தங்கி இருந்து சேவை புரிந்துள்ளாா். பின்னா், காந்தி கிராமத்தில் பயின்று சமூக சேவையில் ஈடுபட்டு வந்தாா். குரோம்பேட்டையில் பூமி தானம் மூலம் பெறப்பட்ட இடத்தில் 1957 -ஆம் ஆண்டில் சா்வோதய பள்ளியை நிறுவினாா். இந்தப் பள்ளியை ஜெயபிரகாஷ் நாராயண் திறந்து வைத்தாா்.
குரோம்பேட்டையில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் கவுன்சிலரான இவா் பெண் கல்வி அவசியத்தை வலியுறுத்தி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டாா். நாகலட்சுமியின் உடலுக்கு அவரது பள்ளியில் பயின்ற காயிதேமில்லத் பேரன் தாவூத் மியாகான், தாம்பரம் மாநகராட்சி துணைமேயா் ஜி.காமராஜ், மூத்த சமூக ஆா்வலா் குரோம்பேட்டை சந்தானம் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா். நாகலட்சுமியின் உடல் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை மின் எரியூட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


