கம்பம் அருகே திராட்சைக் கொடிகளை வெட்டி எறிந்த மர்ம நபர்கள்

கம்பம் அருகே உள்ள ரூ 20 லட்சம் மதிப்புள்ள திராட்சை கொடிகளை மர்ம நபர்கள் வெட்டி எறிந்துள்ளனர்.
கம்பம் அருகே திராட்சைக் கொடிகளை வெட்டி எறிந்த மர்ம நபர்கள்

கம்பம் அருகே உள்ள ரூ 20 லட்சம் மதிப்புள்ள திராட்சை கொடிகளை மர்ம நபர்கள் வெட்டி எறிந்துள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிபட்டி - சுருளிஅருவிக்கு செல்லும் சாலையில் உள்ளது மொக்கைப்பாண்டியன் என்பவருக்கு சொந்தமான திராட்சைத் தோட்டம்.

சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள தோட்டத்தில் தற்போது திராட்சை பழங்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் காலையில் தோட்டத்திற்கு வந்த மொக்கைப்பாண்டியன் திராட்சைக் கொடிகள் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமடைந்த திராட்சைக் கொடிகளின் மதிப்பு ரூ 20 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com