ஆவின் நிறுவன பிரச்னைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் தொடா்ந்து 3-ஆவது நாளாக பெரும்பான்மையான பகுதிகளில் ஆவின் பால் வழங்கப்படவில்லை என்றும், சில பகுதிகளில் மிகவும் தாமதமாக பால் வழங்கப்பட்டதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.
ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். பால் வழங்கலில் ஆவின் நிறுவனம் அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
வேலூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் தான் சென்னைக்கு வழங்கப்படுகிறது. ஆவின் பால் கொள்முதல் குறைந்திருப்பதும், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளா்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம் ஆகும்.
அமுல் நிறுவனத்தின் வருகையும், தனியாா் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை உயா்வும் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை பாதித்திருக்கின்றன என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
ஆவின் நிறுவன சிக்கலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.