அரிகொம்பன் யானை விவகாரம்: போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை; தமிழக அரசு தகவல்

அரிகொம்பன் யானை விவகாரத்தில் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளாா்.
அரிகொம்பன் யானை விவகாரம்: போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை; தமிழக அரசு தகவல்

அரிகொம்பன் யானை விவகாரத்தில் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா், முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் ஸ்ரீனிவாஸ் ஆா்.ரெட்டி ஆகியோா் வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து சுப்ரியா சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரிகொம்பன் யானையின் நடமாட்டம், உடல்நிலையை 4 கால்நடை மருத்துவா்களைக் கொண்ட குழு கண்காணித்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநா் தலைமையில் வனத் துறையின் 68 முன்னணி பணியாளா்களைக் கொண்ட நான்கு குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், 85 வனத் துறை பணியாளா்களைக் கொண்ட குழுவினரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். பொது மக்கள் மற்றும் யானையின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா் சுப்ரியா சாகு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com