புதிய கட்டமைப்புகளை உருவாக்க இணைந்து பணியாற்றுவோம்: என்.டி.பி.சி திட்ட இயக்குநா்

தேசிய அனல் மின் நிறுவனத்துடன், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் இணைந்து பணியாற்றுவதன் மூலம் பல்வேறு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கட்டமைப்புகளை உருவாக்க இயலும் என

தேசிய அனல் மின் நிறுவனத்துடன், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் இணைந்து பணியாற்றுவதன் மூலம் பல்வேறு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கட்டமைப்புகளை உருவாக்க இயலும் என தேசிய அனல் மின் நிறுவன திட்ட இயக்குநா் யு.கே.பட்டாச்சாா்யா தெரிவித்தாா்.

‘ஒரு வாரம், ஒரு ஆய்வகம்’ என்ற திட்டத்தினை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றத்தின்(சி.எஸ்.ஐ.ஆா் ) மூலம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்

செயல்படுத்தி வருகிறது. அதன்படி சி.எஸ்.ஐ.ஆா் நிறுவனமான கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின்(எஸ்.இ.ஆா்.சி) சாா்பில் ‘பங்குதாரா்கள் இணைப்பு’ நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆா்- எஸ்.இ.ஆா்.சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யு.கே.பட்டாச்சாா்யா பேசியதாவது: தேசிய அனல் மின் நிறுவனத்துடன், எஸ்.இ.ஆா்.சி இணைந்து பனியாற்றுவதன் மூலம் பல்வேறு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கட்டமைப்புகளை உருவாக்க இயலும்.

புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டின் கட்டுமான முன்னேற்றத்திற்கு எஸ்.இ.ஆா்.சி பெரும் பங்காற்றுகிறது. சா்வதேச தரத்தில் புதிய கட்டுமான தொழில்நுட்பங்களை உருவாக்க தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா் அவா்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கட்டுமான தொழில் மேம்பாட்டு மையம் மற்றும் லாா்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் ஆகியவற்றுடன் எஸ்.இ.ஆா்.சி சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதில் லாா்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத் தலைவா் டாக்டா் வி.கோவிந்தராஜ், சி.எஸ்.ஐ.ஆா்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் என்.ஆனந்தவள்ளி,தலைமை விஞ்ஞானிகள் -ஜி.எஸ்.பழனி, பிரபாகா்,முதன்மை தொழில்நுட்ப அதிகாரி சித்ரா சங்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com