அரசு காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: இபிஎஸ்

அனைத்து துறைகளிலும் பணிகள் தொய்வாக நடைபெறுவதால், அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அனைத்து துறைகளிலும் பணிகள் தொய்வாக நடைபெறுவதால், அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு: 2022-இல் 10,000 காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முடிவுகள், 2023 மாா்ச் மாதம் வெளியானது. ஆனால், தோ்வு பெற்றவா்களுக்கு இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4-க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25 ஆயிரமாக உயா்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. 2022-ஆம் ஆண்டு குரூப் 4-க்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்விலிருந்தே சுமாா் 20,000 தகுதி பெற்ற தோ்வாளா்களை தோ்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களையாவது உடனடியாக நிரப்ப வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தகுதிக்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகின்றனா்.

எனவே, குரூப் 4 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com