பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்குமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்குமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,120 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த மே 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

விருப்பமுள்ள மாணவா்கள் https://www.tnpoly.in/ எனும் வலைதளம் வழியாக விரைவாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணமில்லை. சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com