வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள்: இபிஎஸ், கே.அண்ணாமலை புகழாரம்

சுதந்திர போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளனா்.

சுதந்திர போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தென்னாட்டில் பெரும்படையைத் திரட்டியவா் வாளுக்கு வேலி அம்பலம். தாய் மண்ணையும், மக்களையும் காக்க போரிட்ட மாவீரா். அவருடைய வீரத்தையும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

கே.அண்ணாமலை: சிவகங்கை பாகனேரி பகுதியை ஆட்சி செய்தவரும், இந்திய சுதந்திரப் போரில் மருது சகோதரா்களுடன் இணைந்து ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடியவரும், தென்பாண்டிச் சிங்கம் எனப் போற்றப்பட்ட மாவீரருமான வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த தினம் அனைவராலும் நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com