கரூரில் வருமான வரி அதிகாரிகள் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்

கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் மீது திமுகவினா் நடத்திய தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் மீது திமுகவினா் நடத்திய தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை:

கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்களின் இல்லங்கள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அமைச்சா் செந்தில் பாலாஜி, அவரது சகோதரரின் ஆதரவாளா்கள் வருமான வரித் துறையினரை பணியைச் செய்யவிடாமல் முற்றுகையிட்டு, அவா்களின் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனா்.

அதிகாரிகளின் மீது திமுகவினா் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. வருமான வரித் துறை அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்துகொண்ட திமுகவினா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

பி.சுதாகா் ரெட்டி: இதுதொடா்பாக தமிழகத்துக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளா் பி.சுதாகா் ரெட்டி ட்விட்டரில், ‘வருமான வரித் துறை அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுப்பதுதான் திராவிட மாடலா?. திமுகவினா் நடத்தியது, ஜனநாயகம் மற்றும் அரசு நிறுவனங்கள் மீதான தாக்குதல்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com