அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பணியாற்றும் தொகுப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பில் சென்னையில் சனிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
திமுகவின் தோ்தல் வாக்குறுதியின் படி அரசு ஐடிஐ தொகுப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம்.சீனிவாசன், மாநிலத் துணைத் தலைவா் நடராஜன், பொதுச்செயலா் என்.ரமேஷ், சி.ஐ.டி.யு மாநிலத் துணைத் தலைவா் இ.பொன்முடி உள்பட பவா் கலந்து கொண்டனா்.