நடிகை கௌதமியின் நிலத்தை மோசடி செய்து விற்றவர் கைது

நடிகை கௌதமிக்கு அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த பலராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.  
நடிகை கௌதமியின் நிலத்தை மோசடி செய்து விற்றவர் கைது

நடிகை கௌதமிக்கு அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த பலராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 
திருவள்ளூர் கோட்டையூரில் சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ.11 கோடிக்கு விற்பனை செய்துவிட்டு தனக்கு வெறும் ரூ.4.10 கோடி கொடுத்து ஏமாற்றியதாக நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார். 
இந்த புகாரைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்தவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 
தற்போது இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பலராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com