நெடுஞ்சாலை-ரயில்வே கடவு பாதைகளில் நடப்பாண்டு 28 இடங்களில் மேம்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு

தமிழக நெடுஞ்சாலை ரயில்வே கடவு பாதைகளில் நடப்பாண்டு 28 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 
நெடுஞ்சாலை-ரயில்வே கடவு பாதைகளில் நடப்பாண்டு 28 இடங்களில் மேம்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு


வேலூர்: தமிழக நெடுஞ்சாலை ரயில்வே கடவு பாதைகளில் நடப்பாண்டு 28 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 

வேலூர் அரசினர் பெண்ட்லேண்ட் மருத்துவமனை இடிக்கப்பட்டு ரூ.150 கோடி செலவில் நவீன வசதிகளுடனான புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வியாழக்கிழமை திடீரென ஆய்வு செய்தார்.

அவருடன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ  கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியது: 
சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் இம்மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வந்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளாததால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவரின் கோரிக்கையை ஏற்று ரூ.150 கோடியில் நவீன மருத்துவமனை பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க இதனை மூன்று பிரிவுகளாக பிரித்து பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.500 கோடியில் கட்டினார்கள். ஆனால் ரூ.150 கோடி மக்களுக்காக கட்டடங்களை அமைத்து வருகிறோம். பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகள் தரபரிசோதனை மையம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாலாற்றின் குறுக்கே விரிஞ்சிபுரத்தில் மேம்பாலம் அமைக்க துறையின் மூலம் ஆய்வுகள் செய்து வரைபடம் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டப்படும். 

தமிழகத்தில் இந்த ஆண்டு 28 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கபட உள்ளது. காட்பாடியிலும் புதிய ரயில்வே மேம்பாலம் ஒன்று விரைவில் அமைய உள்ளது.

அதிமுக ஆட்சியில் பல ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கினால் அதனை முடிக்காமல் விட்டுவிட்டார்கள். அதற்கு காரணம் இணைப்பு சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தாமல் விட்டுவிட்டு சென்றனர். அவைகளை கணக்கெடுத்து அந்த பணிகளும் தற்போது நடந்து வருகிறது. செங்கல்பட்டு அருகே செய்யூரில் இருளர் சமுதாயம், திருநங்கைகளுக்கு கட்டப்பட்ட வீடுகள் பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது. அது பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் இல்லை. உள்ளாட்சி துறை கட்டுபாட்டில் உள்ளதால் அந்த துறை கவனத்துக்கு கொண்டுச் சென்று அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலு தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com