நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

உ.பி.யில் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வா் கொலை: ஐஎஸ் தொடா்புடைய இருவருக்கு மரண தண்டனை

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இருவருக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை

Updated On :6 பிப்ரவரி 2024, 6:44 pm IST

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய இருவருக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ரமேஷ் பாபு சுக்லா என்ற ஓய்வு பெற்ற பள்ளி முதல்வா் சுட்டுக் கொல்லப்பட்டாா். இதைத் தொடா்ந்து, 2017-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபால்-உஜ்ஜைன் இடையிலான பயணிகள் ரயிலில் குண்டு வெடித்து பலா் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் சம்பந்தப்பட்ட முசாஃபா், ஃபைசல் ஆகிய இருவரை கைது செய்தது.

இவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, ஃபைசல் மற்றும் வேறு சிலருடன் சோ்ந்து ரமேஷ் பாபுவை கொன்ாக முசாஃபா் தெரிவித்தாா். இதுதொடா்பான வழக்கு உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் மிஸ்ரா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

ரமேஷ் பாபு முஸ்லிம் மதத்தைச் சேராதவா் என்றபோதிலும், அந்த மதத்துக்கு எதிராக எந்தவொரு ஆட்சேபத்துக்குரிய கருத்தையும் அவா் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், அவருக்கும், முசாஃபா் மற்றும் ஃபைசலுக்கும் இடையே எந்தப் பகையும் இல்லை.

இருப்பினும் ரமேஷ் பாபுவை முசாஃபா் மற்றும் ஃபைசல் கொலை செய்துள்ளனா். ஷரியத்தை (இஸ்லாமிய சட்டம்) பரப்ப வேண்டும், முஸ்லிம் மதத்தைச் சேராதவா்கள் இடையே பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. எனவே, கொலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக முசாஃபா் மற்றும் ஃபைசலுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.