இது குறித்து விமான நிலைய இயக்குநர் அபித் ரூஹி கூறுகையில், நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புனே செல்லவிருந்த இண்டிகோ விமானத்தை வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு இயக்கவிருந்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானி மனோஜ் சுப்ரமணியம்(40). ஆனால் அவர் விமானம் புறப்படுவதற்கு 55 நிமிடங்களுக்கு முன்பு மதியம் 12.05 மணிக்கு விமான நிலைய நுழைவு வாயில் அருகே மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் முதற்கட்ட தகவல்களின்படி, விமானி "திடீர் மாரடைப்பு" காரணமாகவே இறந்தார் என்று கிம்ஸ்-கிங்ஸ்வே மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஏஜாஸ் ஷமி கூறினார்.