ஈரோடு: கீழ்பவானி பிரதான கால்வாயை சிமென்ட் தளம்(கான்கிரீட்) அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் பல்வேறு விவசாய சங்கத்தினர் பேரணி நடத்தினர். கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் திட்டம் சம்பந்தமான அரசு ஆணையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
இந்த திட்டத்தால் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், நிலத்தடி நீர் தடைபடும் என்றும், பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
மூன்று மாவட்டங்களில் உள்ள கீழ்பவானி கால்வாய் மற்றும் 34 திட்டங்களின் கசிவு நீரை நம்பியிருக்கும் நிலங்கள் பாதிக்கப்படும்.கால்வாயின் மேற்பரப்பை கான்க்ரீட் செய்யும் எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்.கால்வாயின் பலவீனமான பகுதிகளில் மட்டுமே பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

பேரணியில் கலந்துகொண்ட பல்வேறு விவசாய சங்கத்தினர்.
இதையும் படிக்க | சிறு வணிகர்கள் கடன்: மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
கால்வாயின் ஓரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் பிரச்னைக்கு இந்த திட்டம் வழிவகுக்கும் என்பதால், கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த திட்டத்தை விவசாயிகள் கோரவில்லை.
தற்போதுள்ள மண் அணை மற்றும் கால்வாயை பலப்படுத்த வேண்டும், அவைகள் ஏற்கனவே பலமாக உள்ளன. இந்த விவகாரத்தில் விவசாயிகளிடம்
ஆலோசனை நடத்துவதாக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை அவர்கள் நினைவூட்டினர்.ஆனால் அது செய்யப்படவில்லை.கால்வாய் மற்றும் பவானிசாகர் அணையை தூர்வாரலாம்.
பாஜக விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ்,கேஎம்டிகே பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஈஸ்வரன்,பேரணியில் கீழ்பவானி விவசாயிகள் சங்கத் தலைவர் ரவி, சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுதந்தரராசு,சங்கத் தலைவர் சண்முகம்,பாசம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


