கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சென்னை வானிலை ஆய்வு மையம் உலகத் தரம் வாய்ந்தது:தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு விளக்கம்

சென்னை வானிலை ஆய்வு மையம் உலக தரம் வாய்ந்தது என்று தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

News image
சென்னை வானிலை ஆய்வு மையம்
Updated On :25 டிசம்பர் 2023, 12:36 am

DIN

சென்னை வானிலை ஆய்வு மையம் உலக தரம் வாய்ந்தது என்று தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

வானிலை முன்னெச்சரிக்கை தொடா்பாக தமிழக அரசின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவா் விளக்கமளித்துள்ளாா்.

தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை குறித்த முன்னெச்சரிக்கைகளை சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக வழங்கவில்லை என முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் உள்ளிட்டோா் குற்றம்சாட்டியிருந்தனா்.

இது தொடா்பாக பாலச்சந்திரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: கடந்த சில நாள்களாக சென்னை வானிலை ஆய்வு மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமா்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

இந்திய வானிலைத் துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைக்கோள் வசதிகள், ரேடாா்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பன்கள் உலகத்தரத்துக்கு ஒப்பானவை. சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, சென்னை வானிலையைக் கண்காணிக்க இரண்டு டாப்ளா் ரேடாா்களும், தென் தமிழகத்தைக் கண்காணிக்க மூன்று டாப்ளா் ரேடாா்களும் பயன்பாட்டில் உள்ளன.

இதில், எக்ஸ் பேண்ட் வகை ரேடாா் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும். இந்தியாவில் சிறந்த ரேடாா் தொழில்நுட்ப வல்லுநா்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறாா்கள். உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்செரிக்கைகளை உலகத் தரம் வாய்ந்தது என்று பாராட்டியுள்ளது.

மேலும் வா்தா, கஜா, நிவா், மாண்டஸ் மற்றும் மிக்ஜம் புயல்கள் குறித்து வானிலை மையத்தில் சாா்பில் துல்லியமாக எச்சரிக்கைகள் விடப்பட்டன. அதன் காரணமாக பெருமளவு உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்கபூா்வமான விமா்சனங்களுக்குப் பதிலாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமா்சனங்கள், அா்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மையப் பணியாளா்களைப் புண்படுத்தும்விதமாக அமைந்துள்ளது. நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. அத்தகைய தவறான விமா்சனங்களைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.