அகமதாபாத் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரு மாதங்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 09419) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து பிப். 2, 9, 16, 23, மாா்ச் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (9 சேவைகள்) இயக்கப்பட உள்ளன.
மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து அகமதாபாத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5.45 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 09420) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து பிப். 5, 12, 19, 26, மாா்ச் 5, 12, 19, 26, ஏப். 2 ஆகிய தேதிகளில் (9 சேவைகள்) இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் வழியாக இயக்கப்படுகின்றன.
இதற்கான முன்பதிவு பயணச் சீட்டு வியாழக்கிழமை (பிப்.2) காலை 8 மணி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.