மின்சாரத் தடை காரணமாக, தமிழ்நாடு அரசு இணையதளத்தில் புதிய தகவல்களை பதிவேற்றும் பணிகள் நடைபெறாது என்று மாநில அரசு தெரிவித்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (பிப். 11), ஞாயிற்றுக்கிழமைகளில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து, சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை தமிழ்நாடு அரசு இணையதளத்தில் புதிய விவரங்கள் ஏதும் பதிவேற்றம் செய்யப்படாது. திங்கள்கிழமை (பிப். 13) முதல் இணையதளப் பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளது தமிழக அரசு.