நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் தனது ஆதரவினை தெரிவித்தாா். தொடர்ந்து அவருக்கு ஆதராகவும் நேற்று பிரசாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டார். கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பகுதிகளில் இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடு வேண்டும்! தலைமைச் செயலகம் முன் திரண்ட பெரியமேடு பகுதி மக்கள்!

ரோஹித், கோலியால் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறதா? யுவராஜ் சிங் கூறுவதென்ன?

அனுபமா பரமேஸ்வரன் - துருவ் விக்ரம் Break Up? Insta பதிவால் எகிறும் பரபரப்பு!







