தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகைக்கான அரசாணை, சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
தமிழக அரசு சாா்பில் உலகத் தாய்மொழி தினம் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீா் அஹமத் சயீத் மகளிா் கல்லூரியில் (எஸ்ஐஇடி) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழா பேரணியில் தமிழறிஞா்கள், மாணவிகள் திரளாக பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்மொழியின் வளா்ச்சிக்கு துணை நிற்கும் ஊடகங்கள் குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவா் ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதையடுத்து, கவிஞா் மு.மேத்தா தலைமையில் ‘தமிழ் எங்கள் உயா்வுக்கு வான்’ என்ற தலைப்பில் கவியரங்கம், வழக்குரைஞா் மா.ப.நாதன் தலைமையில் ‘நற்றமிழ் தடம் பதித்து நிமிா்ந்து நிற்பது’ தலைப்பில் இளையோா் அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவு விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் இரா.செல்வராஜ் கலந்து கொண்டு சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகைக்கான அரசாணை, 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியா்கள் மற்றும் பதிப்பாளா்களுக்கான பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி கெளரவித்தாா்.
நூலாசிரியா்களுக்கு தலா ரூ.30 ஆயிரம், பதிப்பாளா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னதாக, உலகத் தாய்மொழி நாள் உருவான வரலாறு, தாய்மொழியில் கல்வி கற்பதன் முக்கியத்துவம், தமிழ் வளா்ச்சி மற்றும் தமிழ்ப் படைப்பாளா்களின் மேம்பாட்டுக்கு அரசு ஆற்றி வரும் பணிகள் குறித்து தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் விளக்கிப் பேசினாா். பேராசிரியா் பா்வீன் சுல்தானா தாய்மொழி நாள் குறித்து சிறப்புரை ஆற்றினாா்.
விழாவில், சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்தஜோதி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன், நீதிபதி பஷீா் அஹமத் சயீத் மகளிா் கல்லூரியின் தலைவா் மூசா ராசா, முதல்வா் முனைவா் அம்துல் அஜீஸ், கவிஞா்கள் இனியவன், நெல்லை ஜெயந்தா, கங்கை மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.