பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்க உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

2022-23 கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகின்றன. அதில், 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. 7,600 பள்ளிகளில் பயிலும் 8.80 லட்சம் மாணவர்கள், 3,169 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய தகவல்களை பெற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com