தென் மாவட்ட ரயில் போக்குவரத்து மாற்றமா? பயணிகள் கடும் எதிர்ப்பு

மதுரை மதுரை ரயில்வே கோட்டத்தில், தண்டவாள இணைப்பு பணிக்காக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: மதுரை ரயில்வே கோட்டத்தில், தண்டவாள இணைப்பு பணிக்காக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட தூத்துக்குடி, நெல்லை -மதுரை இடையே இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்துள்ளது. இதில் திருமங்கலம்-மதுரை இடையேயான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 

இதற்கிடையே, கோவில்பட்டி-கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை அகலப் பாதையை இணைக்கும் பணிகள் நடக்க உள்ளது.

இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ராமேசுவரம் -கன்னியாகுமரி வாரம் மும்முறை விரைவு ரயில் (வ.எண்.2262122622) நாளை (திங்கட்கிழமை), கன்னியாகுமரி ராமேசுவரம் விரைவு ரயில் 10 -ஆம் தேதி, திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டிஎக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22627/22628) 11 -ஆம் தேதியும் இருமார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரயில் (வ.எண்.16731/16732) இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை, 11-ஆம் தேதிகளில் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும்.

வருகிற 10 -ஆம் தேதி மதுரை வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு -நெல்லை விரைவு ரயில் (வ.எண்.16845) இன்று, நாளை, 10-ஆம் தேதிகளிலும், நெல்லை - ஈரோடு விரைவு ரயில் (வ.எண்.16846) நாளை, 10,11-ஆம் தேதிகளிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (வ.எண்.20691) இன்று, நாளை, 10-ஆம் தேதிகளிலும், நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் (வ.எண்.20692) நாளை, 10,11-ஆம் தேதிகளிலும் திருச்சி-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

தென்மாவட்ட ரயில்கள் ரத்து கோவை-நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் (வ.எண் . 16322 / 16321 ) நாளை, 10,11 -ஆம் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் ஈரோடு-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. புனலூர்-மதுரை விரைவு ரயில் (வ.எண்.16730) நாளை, 10 -ஆம் தேதிகளிலும், மதுரை-புனலூர் விரைவு ரயில் (வ.எண்.16731) 10,11-ஆம் தேதிகளில் நெல்லை-மதுரை வரை மட்டும் இயக்கப்படும்.

சென்னை-திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (வ.எண்.16105) நாளை 10-ஆம் தேதிகளிலும், திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16106) 10,11-ஆம் தேதிகளிலும் திருச்சி-திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மைசூரு-தூத்துக்குடி விரைவு ரயில் (வ.எண்.16236) 10-ஆம் தேதியும், தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் (வ.எண்.16236) 11 -ஆம் தேதியும் விருதுநகர்-தூத்துக்குடி இடையே ரத்து செய்யப்படுகிறது. மாற்றுப்பாதை சென்னை-குருவாயூர் விரைவு ரயில் (வ.எண்.16127.16128) 10-ஆம் தேதி இருமார்க்கங்களிலும் நெல்லை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். பெங்களூரு-நாகர்கோவில் விரைவு ரயில் (வ.எண்.17235) 10 -ஆம் தேதி விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் நெல்லை சென்று அங்கிருந்து நாகர்கோவில் செல்லும்.

இதுதவிர, திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில், சென்னை-நெல்லை விரைவு ரயில், சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியன வருகிற 10 ஆம் தேதி காலதாமதமாக இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com