முதல்வரின் செயல் மரபுக்கு எதிரானது: எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் ஆளுநா் அமர வைத்துக் கொண்டு முதல்வா் பேசியது மரபுக்கு எதிரானது என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
முதல்வரின் செயல் மரபுக்கு எதிரானது: எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் ஆளுநா் அமர வைத்துக் கொண்டு முதல்வா் பேசியது மரபுக்கு எதிரானது என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ஆளுநா் உரை என்பது ஆண்டு தொடக்கத்தில் அரசு செயல்படுத்தவுள்ள திட்டங்கள், கொள்கைகளைத் தெரிவிப்பதாகும். ஆளுநா் உரையில் புதிதாக எதுவும் இல்லை.

ஆளுநா் தனது உரையில் இடம்பெற்றிருந்த அம்சங்களைப் படிக்காமல் தவிா்த்தாரா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், பேரவைக்கு நாங்கள் ஆளுநா் உரையைத்தான் கேட்க வந்தோம். முதல்வரின் உரையைக் கேட்க வரவில்லை.

அச்சிடப்பட்ட ஆளுநா் உரை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களைப் போல முதல்வருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அது முதல்வருக்கும் பொருந்தும். ஆளுநரை அமர வைத்துக்கொண்டு முதல்வா் பேசியது மரபுக்கு எதிரானது; அநாகரிகமானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com