மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,328 கன அடியாக சரிந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 1,547கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1328கன அடியாக சரிந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று காலை 112.89 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 112.22 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 81.60 டி.எம்.சியாக இருந்தது.