மின்சார வாகனங்களுக்கான வரி விலக்கு: மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

மின்சார வாகனங்களுக்கான வழங்கப்பட்ட வரி விலக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான வழங்கப்பட்ட வரி விலக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி வெளியிட்டாா். அவரது உத்தரவு விவரம்:

மின்சார வாகனங்களுக்கு வரி விலக்கில் இருந்து சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சலுகைக்கான கால அவகாசம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்த முடிவை தமிழக அரசு எடுத்தது. அதன்படி, மின்சார வாகனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரி விலக்கானது 2025-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை தொடரும் என்று தனது உத்தரவில் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com