மின்சார வாகனங்களுக்கான வழங்கப்பட்ட வரி விலக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி வெளியிட்டாா். அவரது உத்தரவு விவரம்:
மின்சார வாகனங்களுக்கு வரி விலக்கில் இருந்து சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சலுகைக்கான கால அவகாசம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்த முடிவை தமிழக அரசு எடுத்தது. அதன்படி, மின்சார வாகனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரி விலக்கானது 2025-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை தொடரும் என்று தனது உத்தரவில் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளாா்.