அமைச்சராக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்தது மகிழ்ச்சி என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவனியாபுரம், பாலமேட்டைத் தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, 'தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் என்ற முறையில் துவக்கிவைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்கள், காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக பங்கேற்று விளையாடி வருகின்றன.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவது குறித்து முதல்வர் அறிவிப்பார். தற்போது ஒரு அவசர வேலை வந்ததால் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருந்து கிளம்பிச் செல்கிறேன்' என்று தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்.
இதையும் படிக்க | அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே விருப்பம்: தமிழிசை பேட்டி