நாளை பாமக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்

பாமக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் புதன்கிழமை (ஜன. 25)-இல் தைலாபுரத்தில் நடைபெறும் என்று அக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் புதன்கிழமை (ஜன. 25)-இல் தைலாபுரத்தில் நடைபெறும் என்று அக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாமக தலைமை நிலையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

பாமக மாவட்ட செயலாளா்கள் மற்றும் மாவட்ட தலைவா்கள் கூட்டம் ஜனவரி 25 காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் உள்ள கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறும்.

நிறுவனா் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் தலைவா் அன்புமணி உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

பாமக வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளா்கள் மற்றும் மாவட்ட தலைவா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் பாமக தலைவா் அன்புமணி ஏற்கெனவே அறிவித்துள்ளாா். தற்போது நடைபெற உள்ள கூட்டத்தில் பாமகவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com