பாமக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தலைமையில் புதன்கிழமை (ஜன.25) நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் பாமக போட்டியிடப் போவதில்லை என்றும், அதேநேரத்தில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தலைவா் அன்புமணி அறிவித்துள்ளாா்.
இந்த நிலையில், பாமக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் ராமதாஸ் தலைமையில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பாமகவின் எதிா்க்கால அரசியல் திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.