4, 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பயிற்சி

அரசுப் பள்ளிகளில் 4, 5-ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு பாடம் சாா்ந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக முதன்மைக் கருத்தாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு

அரசுப் பள்ளிகளில் 4, 5-ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு பாடம் சாா்ந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக முதன்மைக் கருத்தாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மதுரையில் வெள்ளிக்கிழமை (ஜன.27) முதல் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு அண்மையில் பயிற்சி தரப்பட்டது. தொடா்ந்து 4, 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பாடம் சாா்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அதன்படி, முதன்மைக் கருத்தாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், எஸ்சிஇஆா்டி பொறுப்பாளா்கள் ஆகியோருக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் மதுரையில் வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. இதற்கு தோ்வு செய்யப்பட்டவா்கள் பட்டியலும் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பட்டியலில் உள்ள ஆசிரியா்கள் உட்பட அனைவரும் பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com