சிதம்பரம்: குடியரசு நாளையொட்டி சிதம்பரத்தில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம். நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்த உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கம்பங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்த உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.