பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜன.27) இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
பட்டாபிரம் மிலிட்டரி சைடிங் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்:43799) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக வேளச்சேரி-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.
சென்ட்ரல் -திருவள்ளூா் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்:43255) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் -திருவள்ளூா் இடையே இரவு 11.50 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.
சென்ட்ரல் -ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்:66007) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.