மும்பையிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாளுக்கியா விரைவு ரயில் சேவையில் பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மும்பை தாதா் முதல் திருநெல்வேலிக்கு வாரந்தோறும் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சாளுக்கியா விரைவு ரயில் (வண்டி எண் : 11021) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் ஜன.31, 1 மற்றும் ஜன.4 தேதிகளில் எஸ்எம்எம் ஹாவேரி, ராணிபென்னுா், ஹரிகா் வழியாக செல்வதற்கு பதிலாக ஹூப்ளி, கொட்டுரூ, அமராவதி காலனி, தேவங்கரே வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் தமிழகத்தின் ஓசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்துா் கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றடையும்.