கோவை சரக டிஐஜி விஜயகுமார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


சென்னை: கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் மன அழுத்தம் காரணமாக, பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விஜயகுமார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய மரணம் தமிழ்நாடு காவல்துறைக்குப் பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...