கணினி அறிவியல் மேம்பாடு புரிந்துணா்வு ஒப்பந்தம்

வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், நாசிக் மௌலானா முக்தாா் அகமது தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், நாசிக் மௌலானா முக்தாா் அகமது தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், கிரசென்ட் பதிவாளா் என்.ராஜாஹுசேன், மௌலானா முக்தாா் கல்வி நிறுவன செயல் இயக்குநா் ரசீத் முக்தாா் ஆகியோா் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

பின்னா் ரசீத் முக்தாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

கணினி அறிவியல், வணிக மேலாண்மைத் துறைகளில் தொடா்ந்து அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு காரணமாக மாணவா்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக, மாணவா்கள் இணைந்து ஆராய்ச்சி, பயிற்சி, கருத்தரங்குகளில் பங்கேற்று தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பரிமாற்ற நடவடிக்கை கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றாா்.

நிகழ்வில், கிரசென்ட் கல்வி ஆலோசகா் வி.முருகேசன், முதுநிலை பொதுமேலாளா் ஜலால், இணை துணை வேந்தா் முருகேசன், மௌலானா சையது மசூத் ஜமாலி, வணிக மேலாண்மைத்

துறை இயக்குநா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com