சென்னை: தமிழகத்தில் சிற்பி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் 5,000 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர்.
ஒரே நேரத்தில் 5000 மரக்கன்றுகளை நட்டதோடு மட்டுமல்லாமல், 5 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கியும் சாதனை படைத்துள்ளனர்.
சென்னையில் இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இயற்கையை பேணுவோம் என்ற தலைப்பின் கீழ், 5 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து வனத்துறையினரிடம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிக்க.. சாப்பிடும்போது உப்பு போட வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்
அரசுப் பள்ளி மாணவர்கள் திறனை மேம்படுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த சிற்பி திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 5,000 மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.