ரயில்வே சேவைகளுக்கு ரூ.2,000நோட்டுகளை பயன்படுத்தலாம்

ரயில்வே சேவைகளுக்கு ரூ 2,000 நோட்டுகளை பயன்படுத்தலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே சேவைகளுக்கு ரூ 2,000 நோட்டுகளை பயன்படுத்தலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்ததைத் தொடா்ந்து, அனைத்து வங்கிகளிலும் செவ்வாய்க்கிழமை முதல் செப்.30-ஆம் தேதி வரை ரூ. 2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பயணத்துக்காக ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு மையங்களில் பயணச்சீட்டு பெறுதல், முன்பதிவு, ரயில்வே உணவகங்கள், பாா்சல் சேவை உள்ளிட்ட ரயில்வே சேவைகளுக்கு ரூ.2,000 நோட்டுகளை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com