ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சீருடையில் வரும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்: நடத்துனர்களுக்கு உத்தரவு!

பள்ளிச் சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :31 மே 2023, 6:57 am

DIN

பள்ளிச் சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பயணத்திற்கு மாணவர்கள் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அடையாள அட்டை தருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால், சீருடையில் வரும் மாணவர்களை பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.