மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குடிநீர் உற்பத்தி இயந்திரத்தை நன்கொடையாக வழங்கினார்.
நடிகர் கமல்ஹாசனின் 69-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றத்தினர் ரத்த தான முகாம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை ரூ. 10 லட்சம் செலவில் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்த விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.