திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காலணி, தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு! 

நாட்டிலேயே காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவதாக தொழில் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :22 நவம்பர் 2023, 2:41 pm IST


சென்னை: நாட்டிலேயே காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவதாக தொழில் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளதாவது: 
தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருள்கள் கொள்கை 2022 வெளியிடப்பட்டதில் இருந்து ரூ.2,250 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.1000 கோடி அளவில் தயாராகி வருகின்றன. 

கூடுதலாக தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதியில் 48 சதவிகிதம் என்ற பெரும் பங்கைக் கொண்டு நாட்டிலேயே, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த துறை விரிவடையும். 

இந்த துறை, ஊரகப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தி வருவதாக டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.