சென்னை: புதிய வால்வோ சொகுசுப் பேருந்துகள் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ.2.92 கோடி மதிப்பில் 2 புதிய வால்வோ சொகுசுப் பேருந்துகள் சுற்றுலா பயன்பாட்டிற்காக இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 58 மாணவர்கள் இன்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.