தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி அமைச்சர் உதயநிதி பேச தடை நீட்டிப்பு

கொடநாடு வழக்கில்  அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
உயா்நீதிமன்றம்
Updated On :6 அக்டோபர் 2023, 11:52 am

DIN

கொடநாடு வழக்கில்  அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செப். 7-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது என்றும், ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீா்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது அறிக்கை எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும் உள்ளன. 

எனவே, என்னைப் பற்றி பேச அமைச்சா் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 2ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை ஏற்று விசாரணை நவம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.