மத்திய அரசு 'இந்தியா' என்ற பெயரை 'பாரதம்' என மாற்ற முயற்சிக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் 'பாரதம்' என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கான குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் 'பாரத குடியரசுத் தலைவர்' (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்தியா என்ற பெயர் 'பாரத்' என மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை 'பாரதம்' (ரிபப்ளிக் ஆஃப் பாரத்) என மாற்றுவதற்கான தீர்மானத்தை மத்திய அரசு முன்மொழியலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி தனது வாழ்த்துச் செய்தியில்,
தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நம் நாட்டின் இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து, வலிமை மற்றும் திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிப்போம்' என குறிப்பிட்டுள்ளார்.
I extend my warm greetings and good wishes to all teachers on #NationalTeachersDay. Let us express our gratitude to our teachers for their pivotal role in building strong and capable Bharath by shaping the calibre and character of our young minds.: Governor Ravi pic.twitter.com/RUSYGEmV61
â RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 5, 2023
ஆளுநர் ஆர்.என். ரவியும் இந்தியாவை 'பாரதம்' என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









