ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்; வாக்களிக்க மறவாதீர்! -பாஜக தலைவர் அண்ணாமலை

ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்; வாக்களிக்க மறவாதீர்! -பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக சார்பில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று(ஏப். 17) கோவையில் வாகனப் பேரணி நடத்தி வாக்கு சேகரித்தார். அப்போது, ”ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்; வாக்களிக்க மறவாதீர். வாக்குப்பதிவு நாள் ஒவ்வொருவருக்கும் முக்கியமான நாள்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

மேலும், தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகிட, இளைஞர்களுக்கான அரசியல் பிறந்திட, அனைவருக்கும் சமவாய்ப்புகள் மலர்ந்திட, தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்வதாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com