தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்’: கமல்ஹாசன்

நாளை நமதே என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதன்கிழமை காலை பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :17 ஏப்ரல் 2024, 7:33 am

DIN

நாளை நமதே என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதன்கிழமை காலை பதிவிட்டுள்ளார்.

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

கோவையில் நேற்றுடன் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்ட கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வலியுறுத்தி எக்ஸ் தளத்தில் இன்று காலை பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, காலை உணவுக்கேற்ற அர்த்தமுள்ள வரிகள் என்று கவிதை ஒன்றை கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

“காலை

பசியாறுகையில்

கனைகுரல் பல்லியொன்று

கட்டியம் கூறக்கேட்டேன்

செக்கச் சிவந்து கிழக்கு வெளுக்க

தெக்கும் வடக்கும்

அகக்கண் திறக்கும்

தேடிவரும் நாளை நமதே என்று” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.